நாம் சாப்பிடும் உணவானது செரித்து, உணவில் உள்ள கொழுப்புகள் ஆற்றலாக மாற்றப்படக் குறைந்தது ஆறு முதல் எட்டு மணி நேரம் தேவை. ஆனால், நாமோ உணவுக்கு இடைவெளி கொடுக்காமல் அடுத்த வேளை சாப்பாட்டைச் சாப்பிடுகிறோம். இதனால் உடலில் சேமிக்கப்பட்ட கொழுப்பானது உடலியக்கத்துக்குத் தேவையான ஆற்றலாக உபயோகப்படுத்தப்படுவது தடுக்கப்பட்டு, அப்படியே தேங்கிவிடுகிறது. தினமுமே அடுத்த வேளை உணவுக்கு இடையில் போதிய இடைவெளியை அனுமதிப்பதுகூட ஒரு வகையில் விரதம்தான்.